டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு: 35 பேர் சென்னைக்கு வரவழைப்பு

கடந்த ஆண்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தினால் குரூப்-4 பணிகளுக்கான தேர்வு நடத்தப்பட்டது. இந்தத் தேர்வின் முடிவுகள், கடந்த நவம்பர் மாதம் 15-ம் தேதி வெளியானது. இந்த தேர்வில் வெற்றியடைந்து தரவரிசைப் பட்டியலில் முதல் 100 இடங்களில் இடம் பிடித்தவர்களில் 35 பேர், குறிப்பிட்ட இரு தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்கள் என்பதால், தேர்வில் முறைகேடு நடந்திருக்கக் கூடும் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடந்து வரும் நிலையில் ராமநாதபுரம், கீழக்கரை ஆகிய இரு தேர்வு மையங்களில் தேர்வு எழுதிய 35 பேர் சென்னைக்கு வரவழைக்கப்பட்டனர். சென்னையில் 35 பேரிடம் டி.என்.பி.எஸ்.சி விசாரணை தொடங்கியதாகவும் இந்த விசாரணையின் முடிவில் திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply