shadow

டி.என்.பி.எல் கிரிக்கெட்: சூப்பர் ஓவரில் அசத்திய காஞ்சி வாரியர்ஸ். லைகா அணிக்கு முதல் தோல்வி

10கடந்த 24ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் டி.என்.பி.எல் போட்டி தொடரின் நேற்றைய ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ் அணியும் ரூபி காஞ்சி வாரியர்ஸ் அணியும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதின

இரவு-பகம் ஆட்டமாக நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ரூபி காஞ்சி வாரியர்ஸ் முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது. இதனால் முதலில் பேட்டிங் செய்த லைகா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்தது. அனிருத் சீதா ராம் 39 ரன்களும், ஹரிஸ் குமார் 26 ரன்களும் எடுத்தனர்.

127 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய காஞ்சி அணியும் 20 ஓவர்களில் 126 ரன்கள் எடுத்ததால் சூப்பர் ஓவர் போட முடிவு செய்யப்பட்டது.

சூப்பர் ஓவரில் காஞ்சி அணி 13 ரன்கள் எடுத்தது. 14 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கோவை அணி 9 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. காஞ்சி அணியின் வீரர் நிலேஷ் சுப்பிரமணியன் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

Leave a Reply