கொரோனா வைரஸ் எதிரொலி: தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளை முட உத்தரவு

கொரோனா வைரஸ் காரணமாக தமிழகத்தில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வரப்பட்டு வரும் நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி தமிழகம் முழுவதும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் உத்தரவிட்டுள்ளார்

அது மட்டுமின்றி தமிழகத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களையும் மார்ச் 31-ஆம் தேதி வரை மூட உத்தரவிட்டு உள்ளதோடு அங்கன்வாடி மையங்களையும் மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது மேலும் அனைத்து தியேட்டர்களையும் மூட வேண்டும் என்றும் அரசு உத்தரவிட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இருப்பினும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் மருத்துவம் மருத்துவம் சார்ந்த கல்லூரிகள் தொடர்ந்து இயங்கும் எங்கும் தமிழக அரசு அறிவித்துள்ளது

கொரோனா வைரஸ் எதிரொலியாக தமிழக அரசு எடுத்துள்ள இந்த அதிரடி நடவடிக்கையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Leave a Reply