shadow

முதலமைச்சர் ஆகிறார் எடப்பாடி பழனிசாமி. ஆளுனர் அதிகாரபூர்வ அழைப்பு

தமிழகத்தில் ஆட்சி அமைக்குமாறு அதிமுக சட்டமன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமிக்கு ஆளுனர் வித்யாசாகர் ராவ் அழைப்பு விடுத்துள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் வெளிவந்துள்ளது.

15 நாட்களில் வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மை நிரூபிக்கவேண்டும் என்று ஆளுனர் அறிவுறுத்தியுள்ளதாகவும், இதனையடுத்து ஆளுநர் மாளிகையில் மாலை 5 மணிக்கு எடப்பாடி பழனிசாமி பதவியேற்பு விழா நடைபெறும் என என ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கவர்னரின் இந்த முடிவு காரணமாக கடந்த சில நாட்களாக இருந்த குழப்ப நிலை முடிவுக்கு வருகிறது.

Leave a Reply