அமைச்சரவை கூட்டத்தில் அதிரடி முடிவு

தமிழகத்தில் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ள நிலையில் மூன்றாம் தேதிக்கு பின்னரும் ஊரடங்கு உத்தரவு நீடிக்க வாய்ப்பு இருக்கிறதா? என்ற கருத்து பரவலாக நிலவி வருகிறது

இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு முடிவதற்கு முந்தைய நாளான மே இரண்டாம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தலைமையில் நடைபெற உள்ளது

இந்த அமைச்சரவை கூட்டத்தில் மே மாதம் மூன்றாம் தேதிக்கு பின்னர் ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது குறித்த முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு தளர்வு இருந்தாலும் தலைநகர் சென்னையில் ஊரடங்கு தொடர்ந்து நீடிக்கும் என்றே கருதப்படுகிறது

Leave a Reply