shadow

பேருந்து கட்டண உயர்வுக்கு மக்களிடம் மன்னிப்பு கேட்ட அமைச்சர்

தமிழகத்தில் பேருந்து கட்டணங்கள் இன்று முதல் உயர்ந்துள்ளது. அதிலும் சுமார் 50% கட்டணங்கள் உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பேருந்து கட்டண உயர்வை கண்டித்து ஆங்காங்கே பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்

இந்த நிலையில் நாமக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கமணி, போக்குவரத்து கழகம் தவிர்க்க முடியாத காரணத்தினால் பேருந்து கட்டணத்தை உயர்த்தியுள்ளதாகவும் பொது மக்கள் எங்களை மன்னித்து ஒத்துழைப்பு தர வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆனால் அமைச்சரின் வேண்டுகோளை ஏற்று கொள்ள முடியாது என்றும் பேருந்து கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என்றும் பொதுமக்கள் தங்கள் எதிர்ப்பை தொடர்ந்து வருகின்றனர்.

Leave a Reply