தமிழக அரசு தகவல்

சென்னையில் சலூன் கடைகள் திறக்க அனுமதிக்க வேண்டும் என்று முடிதிருத்துவோர் சங்கத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது

இந்த வழக்கின் விசாரணை இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்தபோது சலூன் கடைகள் திறப்பு குறித்து கள நிலவரங்களை ஆய்வு செய்த பின்னர் முடிவு எடுக்கப்படும் என்று தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது

இதனை அடுத்து இந்த வழக்கை ஜூன் 8ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அறிவித்துள்ளனர். அதுவரை சென்னையில் சலூன் கடைகள் திறக்க அனுமதிக்க படாது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply