shadow

ஆற்று மணலை அரசிடம் இருந்து பெற்றுக் கொள்ளலாம் என்றும் அதற்காகவே இணையதளம் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டுள்ளது என்றும் ஏற்கனவே நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியிருந்தார்

இந்த நிலையில் தமிழகத்தில் ஆற்று மணலை ஒரு யூனிட் ஆயிரம் ரூபாய் என்று விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளதாக அரசு அறிவித்துள்ளது

அதிக கட்டணத்திற்கு மணல் விற்கப்படுவதாக எழுந்த புகாரை அடுத்து தமிழக அரசு இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

எனவே வீடு கட்டுபவர்கள் மணல் தேவை என்றால் அரசிடமிருந்து ஒரு யூனிட் ஆற்றுமணல் ரூபாய் 1000 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.