shadow

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் நளினிக்கு ஒரு மாத பரோலில் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கிய ஏழு தமிழர்களில் ஒருவர் நளினி. இவர் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் தண்டனை அனுபவித்து வருறார்.

இந்த நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக பாதிக்கப்பட்ட தன்னை கவனித்துக் கொள்வதற்காக நளினிக்கு பரோல் வழங்க கோரி அவரது தாயார் பத்மா சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார்.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது நளினிக்கு ஒரு மாதம் பரோல் வழங்க உத்தரவிட்டுள்ளதாக தமிழக அரசு சென்னை ஐகோர்ட்டில் தெரிவித்துள்ளது.