shadow

இன்று முதல் மதுபானங்கள் விலை ரூபாய் 10 முதல் 80 வரை உயரும் என அறிவிக்கப்பட்டுள்ளது குடிமகன்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

தமிழ்நாட்டில் மதுபானங்கள் விலை விரைவில் உயரும் என ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில் தற்போது இன்று முதல் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் விலை உயர்வு என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் மதுபானங்களின் விலை குறைந்த பட்சம் பத்து ரூபாயிலிருந்து அதிகபட்சம் 80 ரூபாய் வரை விலை அதிகரிப்பதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த விலை உயர்வின் மூலம் தமிழ்நாடு அரசுக்கு தினமும் 10.35 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும் என்றும் டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது

மதுபானங்கள் விலை உயர்ந்துள்ளது அடுத்து குடிமகன்கள் தங்கள் அதிருப்தியை தெரிவித்துள்ளனர்.