திமுகவின் செயல்பாடு கூட்டணி தர்மத்திற்கு எதிரானது: கே.எஸ்.அழகிரி பரபரப்பு அறிக்கை

உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு போதுமான இடம் ஒதுக்காதது குறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டி கே.எஸ்.அழகிரி விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழகத்தில்‌ நடந்து முடிந்துள்ள ஊரக உள்ளாட்சித்‌ தேர்தலில்‌ தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில்‌ காங்கிரஸ்‌ கட்சி இணைந்து போட்டியிட்டது. தொடக்கத்திலிருந்து எந்த ஒப்பந்தமும்‌ இல்லாமல்‌ மாவட்ட அளவில்‌ பேசி முடிவெடுப்பதென தீர்மானிக்கப்பட்டது. ஆனால்‌, அந்த முயற்சிகளுக்கு மாவட்ட அளவில்‌ எந்த ஒத்துழைப்பும்‌ இதுவரை கிடைக்கவில்லை.

தி.மு.க. தலைமையிலிருந்து அறிவுறுத்தப்பட்ட இடங்களில்‌ கூட காங்கிரஸ்‌ கட்சிக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. 303 ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர்‌ பதவிகளில்‌ இதுவரை 2 இடங்கள்‌ மட்டும்‌ தி.மு.க. தலைமையால்‌ வழங்கப்பட்டுள்ளது.

27 மாவட்ட ஊராட்சித்‌ தலைவர்‌ பதவிகளில்‌ ஒரு மாவட்ட ஊராட்சித்‌ தலைவர்‌ பதவியோ, துணைத்‌ தலைவர்‌ பதவியோ இதுவரை வழங்கப்படவில்லை. இது கூட்டணி தர்மத்திற்கு புறம்பானது என்பதை மிகுந்த வருத்தத்துடன்‌ தெரிவித்துக்‌ கொள்கிறோம்‌.

Leave a Reply