shadow

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் சட்டமன்றம் கூடும் தேதி அறிவிப்பு

அதிமுகவின் இரு அணிகள் இணையுமா? இணையாதா? என்ற பரபரப்பு, தினகரன் விடுதலை அடைந்து மீண்டும் கட்சி பணி ஆற்றவுள்ளதான அறிவிப்பு, கருணாநிதியின் 94வது பிறந்த நாளை நாடே திரும்பி பார்க்கும் வகையில் நடத்தி காட்டிய திமுக என தமிழக அரசியல் பரபரப்புடன் சென்று கொண்டிருக்கும் நிலையில் சற்று முன்னர் சட்டப்பேரவை கூடும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

சற்று முன் செய்தியாளர்களை சந்தித்த சட்டப்பேரவை பொறுப்பு செயலர் ‘வரும் 14 ஆம் தேதி சட்டமன்றம் கூடுவதாகவும், இந்த கூட்டத்தின்போது மானியக்கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெறும் என்றும் கூறினார். தமிழக சட்டப்பேரவையின் இந்த கூட்டம் 30 முதல் 35 நாட்கள் நடைபெறும் என்று பேரவை செயல்ர் கூறினார் மேலும் இந்த கூட்டத்தொடரில் ஜிஎஸ்டி மசோதா தாக்கலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த கூட்டத்தின்போது தண்ணீர்பிரச்சனை, மின்சார தடை பிரச்சனை உள்பட திமுக எம்.எல்.ஏக்கள் பல்வேறு பிரச்சனைகள் குறித்து எழுப்ப உள்ளதாக செய்திகள் கூறுகின்ற்ன.

Leave a Reply