ஏராளமானோர் அஞ்சலி

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் இந்திய சீன எல்லையான லடாக் பகுதியில் நடந்த இந்திய சீன ராணுவ வீரர்களுக்கு இடையிலான மோதலில் தமிழக வீரர் பழனி என்பவர் வீரமரணம் அடைந்தார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் லடாக் எல்லையில் வீர மரணம் அடைந்த தமிழக வீரர் பழனியின் உடல் அவரது சொந்த ஊரில் ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது

ராமநாதபுரம் மாவட்டம் கடுக்கலூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த பழனியின் உடல் அவரது சொந்த ஊருக்கு நேற்று இரவு எடுத்து வரப்பட்டது. அதன் பின்னர் ராணுவ மரியாதையுடன் இன்று அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது

அவருடைய உடலுக்கு அந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி ஏராளமானோர் இறுதி அஞ்சலி செலுத்தினர். ராணுவ வீரர்களின் உடல் துப்பாக்கி குண்டுகள் முழங்க சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டது. நாட்டுக்காக உயிர் தியாகம் செய்தவர் பழனி என மக்கள் புகழாரம் கூறிக்கொண்டே அவருக்கு இரங்கல் தெரிவித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply