தொடர்மழை எதிரொலி: திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகள் விடுமுறை
கடந்த இரண்டு நாட்களாக சென்னை உள்பட தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் பருவமழை தொடர்ந்து பெய்து வருகின்றது. நேற்று இரவு முழுவதும் சென்னையின் பல இடங்களில் நல்ல மழை பெய்தது
இந்த நிலையில் கனமழை தொடர்ந்து பெய்து வருவதன் காரணமாக திருவாரூரில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
மேலும் இன்று சென்னை உட்பட கடலோர மாவட்டங்களில் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
You must be logged in to post a comment.