அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் ஸ்ரீதேவி பூதேவி :திருமலையில் குவிந்த பக்தர்கள்
திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவிலில் உற்சவ நிகழ்ச்சிகள் நடைபெற்றுவரும் நிலையில் வருடாந்திர தெப்பத்திருவிழா உற்சவம் மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது
இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் தெப்ப உற்சவத்தின் நான்காவது நாளான நேற்று ஸ்ரீதேவி மற்றும் பூதேவி அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் ஐந்து சுற்றுகள் வலம் வந்ததை பக்தர்கள் கண்டு அருள் பெற்றனர்
இன்று தெப்ப உற்சவத்தின் கடைசி நாள் என்பதால் பௌர்ணமி கருட சேவையை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ள காரணத்தினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
Leave a Reply
You must be logged in to post a comment.