shadow

12 மணி நேரம் நடை சாத்தப்படும்: திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோவிலின் நடை 12 மணி நேரம் சாத்தப்படும் என்று திருப்பதி திருமலை தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

அக்டோபர் 25ஆம் தேதி சூரிய கிரகணம் ஏற்படுவதாலும், நவம்பர் 8-ஆம் தேதி சந்திர கிரகணம் ஏற்படுவதாலும் திருப்பதி ஏழுமலையான் கோவில் கிரகணத்தின் போது நடத்தப்படும்

சூரிய கிரகணத்தின்போது நடை சாத்தப்படும் நேரம்

அக்டோபர் 25-ந் தேதி மாலை 5.11 மணி முதல் 6.27 மணி வரை சூரிய கிரகணம். எனவே அன்றைய தினம் காலை 8.11 மணி முதல் இரவு 7.30 மணி வரை கோவில் நடை சாத்தப்படும்

சந்திர கிரகணத்தின்போது நடை சாத்தப்படும் நேரம்

நவம்பர் 8-ந் தேதி பிற்பகல் 2.39 மணி முதல் 6.27 மணி வரை சந்திர கிரகணம் நிகழவுள்ளது. எனவே அன்றைய தினம் காலை 8.40 மணி முதல் இரவு 7.20 மணி வரை கோவில் கதவுகள் மூடப்பட்டிருக்கும்