திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித் திருவிழா

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித் திருவிழா தேரோட்டம் விமரிசையாக தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த தேரோட்ட நிகழ்ச்சியை காண தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் வருகை தந்து கலந்து கொண்டு, அரோகரா கோஷம் முழுங்க, தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர்.

முன்னதாக, கோயில் தக்கார் கண்ணன் ஆதித்தன், அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆகியோர் தேரை வடம்பிடித்து தொடங்கி வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply