முதல்முறையாக விலங்குகளுக்கு கொரோனா: புலி,சிங்கத்திற்கும் பரவியதால் பரபரப்பு

அமெரிக்காவில் Bronx Zoo என்ற உயிரியல் பூங்காவில் உள்ள புலி ஒன்றுக்கு கொரனோ பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அந்த புலியால் அந்த உயிரியல் பூங்காவில் உள்ள மேலும் 6 புலிகள் மற்றும் சிங்கங்களுக்கும் கொரோனா அறிகுறி இருப்பதாகவும், இதனையடுத்து கொரோனா பாதித்த புலிகள் மற்றும் சிங்கங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் திடுக்கிடும் செய்திகள் வெளிவந்துள்ளது

முதன்முதலாக ஒரு விலங்கிற்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டது இதுவே முதன்முறை என்பதால் மேலும் பல உயிரினங்களுக்கும் பரவுவோம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

Leave a Reply