தமிழகத்தில் மேலும் மூவருக்கு கொரோனா வைரஸ்: மூவரும் சென்னை என்பதால் பதட்டம்

தமிழகத்தில் ஏற்கனவே 15 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கி உள்ள நிலையில் மேலும் மூவரை கொரோனா வைரஸ் தாக்கி உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது

நியூசிலாந்தில் இருந்து சென்னை வந்த நபர் ஒருவருக்கும் லண்டனில் இருந்து சென்னை வந்த பெண் ஒருவருக்கும் சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று பரவி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது

இதனையடுத்து மூவரும் தனி வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றார். மூவரும் உடல் நிலையும் தற்போது கண்காணிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதனை அடுத்து ஏற்கனவே தமிழகத்தில் 15 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது இந்த எண்ணிக்கையில் மேலும் மூன்று உயர்ந்துள்ளது

அதுமட்டுமன்றி கொரோனா வைரஸ் தொற்று உள்ளவர்கள் மூவருமே சென்னையை சேர்ந்தவர் என்பதால் சென்னையில் பெரும் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது

Leave a Reply