தமிழகத்தில் மேலும் மூவருக்கு கொரோனா வைரஸ்: அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது

இந்த நிலையில் நேற்று கொரோனா வைரசால் மதுரையை சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது அதே நேரத்தில் கொரோனா வைரசால் மதுரையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் குணமாகி வருவதாலகவும், சென்னையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் குணமாகி உள்ளார் என்ற நல்ல செய்தி கிடைத்துள்ளது

இந்த நிலையில் தற்போது அதிர்ச்சியாக மேலும் மூவருக்கு வைரஸ் தொற்று பரவி உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது இதனை அடுத்து அந்த மூவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டும் தினமும் கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

Leave a Reply