சென்னையில் மேலும் மூவருக்கு கொரோனா: அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில் ஏற்கனவே 12 பேர்களை கொரோனா வைரஸ் தாக்கியுள்ள நிலையில் சென்னையில் மேலும் மூவருக்கு கொரோனா தாக்கியுள்ளது.

1.அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பிய 74 வயது நபர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவரது வீடு சென்னை போரூரில் உள்ளது

2. அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பிய 52 வயது பெண் ஒருவரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவரது வீடு புரசைவாக்கத்தில் உள்ளது

3. சுவிட்சர்லாந்து நாட்டில் இருந்து திரும்பிய 25 வயது பெண் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவரது வீடு கீழ்க்கட்டளையில் உள்ளது. இவர் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply