திருப்பதி: தமிழ்புத்தாண்டு தினத்தன்று திருப்பதி கோவிலுக்கு தமிழர்கள் வருகை குறைந்து காணப்பட்டது. கடந்த சில தினங்களுக்கு முன்னர திருப்பதி கோயிலின் அருகே உள்ள வனப் பகுதியில் 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இச்சம்பவத்தை அடுத்து தமிழர்கள் திருப்பதி கோயிலுக்கு வருகைதருவது குறைந்து உள்ளது. தமிழ்புத்தாண்டு தினத்தில் திருப்பதி கோயிலுக்கு தமிழர்கள் வருகை தருவது வழக்கமான ஒன்றாகும். திருப்பதி துப்பாக்கிசூடு சம்பவம் காரணமாக பக்தர்களின் கூட்டம் குறைவாக இருந்ததுடன் கோயிலின் வருமானமும் குறைந்து எதிர்பார்த்த அளவில் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.