ஈவிகேஎஸ் என்னை தெரியாது என்று கூறியது நல்லதுதான். திருநாவுக்கரசர்
முன்னாள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் என்னைத் தெரியாது என்று கூறியது ஒருவிதத்தில் நல்லது தான் என தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளளார்.
நேற்று திமுக செயல் தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ஈவிகேஎஸ் இளங்கோவன் செய்தியாளர்களை சந்தித்தபோது திருநாவுக்கரசர் குறித்த கேள்வி ஒன்றை நிருபர் ஒருவர் கேட்டார். அவருக்கு பதிலளித்த ஈவிகேஎஸ் இளங்கோவன், ‘திருநாவுக்கரசர் குறித்து கேள்வி கேட்டுள்ளீர்கள், அவர் யார் என்றே தெரியாது என்று அதிரடியாக கூறி கேள்வி கேட்ட நிருபரை அதிர்ச்சிக்குள்ளாகினார்
இதுகுறித்து இன்று திருநாவுக்கரசரிடம் கருத்து கேட்டபோது, ‘என்னைத் தெரியாது என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியது நல்லது தான். என்னைத் தெரியாது என்று கூறியதால் இனிமேல் என்னை அவர் திட்ட மாட்டார். தெரிந்தவர்களைத் தான் திட்ட முடியும் தெரியாதவர்களை எப்படித் திட்ட முடியும் என்று கூறினார்.
வழக்கம்போல் தமிழக காங்கிரஸில் கோஷ்டி பூசல் முற்றியதைத்தான் இது காட்டுவதாக காங்கிரஸ் தொண்டர்கள் கருத்து கூறி வருகின்றனர்.
Thirunavukarasar Retaliation to EVKS
Leave a Reply
You must be logged in to post a comment.