shadow

கனவில் வந்து பயமுறுத்திய கடவுள்: திருடிய சிலைகளை ஒப்படைத்த திருடர்கள்

கோவிலில் இருந்து திருடிய சிலைகளை மீண்டும் கோவிலுக்கு பக்கத்தில் வைத்துவிட்டு சென்ற திருடர்கள் கடவுள் கனவில் வந்து பயமுறுத்தியதால் சிலைகளை மீண்டும் திருப்பி கொண்டு வந்துவிட்டதாக லெட்டர் எழுதி வைத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கடந்த சில நாட்களுக்கு முன்னர் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பழமையான பாலாஜி கோவிலில் 16 சிலைகள் திருடப்பட்டன

இந்த நிலையில் திருடப்பட்ட 16 சிலைகளில் 14 சிலைகளை திருடர்கள் மீண்டும் கோவிலுக்கு வந்து வைத்துவிட்டனர்

மேலும் திருடர்கள் வைத்த கடிதத்தில் கனவில் வந்து கடவுள் பயமுறுத்தியதால் இந்த சிலைகளை மீண்டும் திருப்பி வைத்து விட்டதாக கூறப்பட்டிருந்தது இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது