shadow

சமந்தா செல்பி புள்ளே, எமிஜாக்சன் குல்பி புள்ளே. தெறி விழாவில் விஜய் பேச்சு

theri-1விஜய் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘தெறி’ படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை சத்யம் திரையரங்கில் வெகுசிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் விஜய், எமிஜாக்சன், அட்லி, ஜி.வி.பிரகாஷ், கலைப்புலி எஸ்.தாணு உள்பட பலர் கலந்து கொண்டனர். காய்ச்சல் காரணமாக சமந்தா இந்த படத்தில் கலந்து கொள்ளவில்லை.

இந்த விழாவில் பேசிய கலைப்புலி எஸ்.தாணு, “‘இப்பவும் எனது விருப்பத்துக்குரிய நடிகர் விஜய்தான். அவரை வைத்து இன்னும் பத்து படங்கள் தயாரிக்கவும் தயார். விஜய்யின் இதயத்தில்  நெருக்கமான இடம் எனக்கு உண்டு. விஜய் ஒரு பெரிய நடிகராக மட்டுமின்றி ஒரு ஜெண்டில்மேனாகவும் திகழ்ந்து வருகிறார் என்று கூறியுள்ளார்.

இந்த விழாவில் நடிகை மீனா பேசியபோது, “”என்னுடைய மகளை ‘தெறி’ படத்தில் நடிக்க அட்லி கேட்டுக்கொண்டவுடன் முதலில் மறுத்தேன். ஆனால் இயக்குனர் அட்லி இந்த கதாபாத்திரத்திற்கு நைனிக பொருத்தமாக இருப்பாள் என்பதில் அட்லி உறுதியாக கூறியதால் கதை மற்றும் கேரக்டரின் முக்கியத்துவத்தை உணர்ந்து பின்னர் சம்மதித்தேன்.

“விஜய் மிகவும் அமைதியானவர். அவர் அதிகம் பேசமாட்டார். ஆனால் குறைவாக பேசினாலும் அது நறுக்கென்று இருக்கும்’ என்று கூறினார்.

மீனாவின் மகள் நைனிகா பேசியபோது, “விஜய் அங்கிள்தான் எனக்கு மிகவும் பிடித்தமானவர்’ என்று தனது மழலை மொழியில் கூறினார்.

இறுதியில் விஜய் பேசியபோது, ‘என்னுடைய  தாய் தந்தைக்கு பிறகு நான் அதிகம் மதிப்பது தாணு சார் அவர்களைத்தான். ‘தெறி’ படத்தை பொறுத்தவரை என்னுடைய படத்தை நானே பெருமையாக பேச விரும்பவில்லை. நீங்கள்தான் படத்தை பார்த்து எப்படி இருக்கின்றது என்று கூற வேண்டும்.

பொதுவாக ஒரு ஆடியோ விழாவில் இசையமைப்பாளர்தான் ஹீரோவாக இருப்பார். ஆனால் இந்த விழாவில் ஹீரோவே இசையமைப்பாளராக உள்ளார். என்னுடைய ரசிகர்கள் அனைவரும் வாழ்க்கையில் உயர்ந்த இடத்தை அடைய வேண்டும். உங்களது முந்தைய சாதனையை நீங்கள்தான் உடைத்தெறிய வேண்டும். அதே நேரத்தில் உங்கள் வெற்றியை பார்த்து நீங்களே பெருமை படாதீர்கள். அடுத்தவன் வச்ச இலக்கை நீ அடையனும்னு நினைக்காத, நீ வச்ச இலக்கை அடுத்தவன் அடையனும்னு நினைக்கனும். இந்த படத்தில் இரண்டு ஹீரோயின்கள். சமந்தா மற்றும் எமிஜாக்சன். ஒருத்தர் செல்பி புள்ள, இன்னொருத்தர் குல்பி புள்ள..இவ்வாறு விஜய் பேசினார்.

Leave a Reply