shadow

இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி நடிப்பில் உருவாகியுள்ள ‘தி வாரியர்’ என்ற திரைப்படம் நாளை தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளில் வெளியாக உள்ளது.

சமீபத்தில் பேட்டியளித்த இயக்குனர் லிங்குசாமி இந்தப் படம் ஒரு உண்மை நிகழ்ச்சியின் அடிப்படையில் கதை உருவாக்கப்பட்டது என்றும் ஆனால் சினிமாவுக்காக கமர்சியல் அம்சங்கள் சேர்க்கப்பட்டு உள்ளது என்றும் தெரிவித்தார்.

ராம் பொத்தினேனி நடிக்கும் முதல் தமிழ் படம் என்பது அவருக்கு ஒரு பெருமை என்றும் கூறப்படுகிறது.

இது ஒரு வழக்கமான போலீஸ் கதையாக இருக்காது என்றும் இதுவரை சினிமாவில் காட்டப்படாத வித்தியாசமான போலீஸ் கதை என்பதை உறுதியாக கூறியுள்ளார்.

இந்தப் படத்தின் வில்லன் கேரக்டரில் நடிக்க விஜய் சேதுபதி, நிவின் பாலி, ஆர்யா மற்றும் ஆதி ஆகிய நான்கு பேர் பரிசீலனையில் இருந்ததாகவும் இறுதியில் ஆதி தேர்வு செய்யப்பட்டதாகவும் கூறினார்.

இறுதியாக இந்த படம் ஆடியன்ஸுக்கு பிடிக்கும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.