மகேஷ்பாபு-ஏ.ஆர்.முருகதாஸ் படத்தின் டைட்டில் இதுதானா?
இளையதளபதி விஜய் நடித்த ‘கத்தி’ படத்தை அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ‘அகிரா’ என்ற பாலிவுட் திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் 2ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் அவர் இயக்கவுள்ள அடுத்த படத்தில் மகேஷ்பாபு ஹீரோவாக நடிக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூலை முதல் தொடங்கவுள்ளது.
இந்நிலையில் இந்த படத்தில் வரலாற்று முக்கியத்துவம் கேரக்டர் ஒன்று இருப்பதாகவும், அவர் போர்த்துகீசியரான வாஸ்கோ-ட-காமா என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்திற்கும் ‘வாஸ்கோ-ட-காமா’ என்ற தலைப்பையே முருகதாஸ் முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. முதலில் இந்த படத்திற்கு எனிமி மற்றும் ஜஸ்டிஸ் ஆகிய டைட்டில்கள் பரிசீலனையில் இருந்ததாகவும் ஆனால் தற்போது வாஸ்கோ-ட-காமா என்ற டைட்டிலை முருகதாஸ் முடிவு செய்துவிட்டதாகவும் கூறப்படுகிறது
மகேஷ்பாபு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை ப்ரிணித்தி சோப்ரா நடிக்கும் இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிக்கவுள்ளார். ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைக்கவுள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழியில் தயாராகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
You must be logged in to post a comment.