shadow

கோவை பல்கலை பேராசிரியர் ஆபாசமாக பேசியதாக கேரள மாணவி கண்ணீர் புகார்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்து வரும் பேராசிரியர் ஒருவர் தன்னிடம் ஆபாசமாக பேசியதாக செய்தியாளர்களிடம் கண்ணீருடன் கூறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவை சேர்ந்த ஹரிதா என்ற மாணவி கோவை பாரதியார் பல்கலைகழகத்தில் முதுகலை அறிவியல் முதலாமாண்டு உளவியல் படித்து வந்தார். ஹரிதா பல்கலைகழக பெண்கள் விடுதியில் தங்கி படிப்பை தொடர்ந்து வந்தார்.

கடந்த நவம்பர் மாதம் 14 ம் தேதி விடுதியில் இருந்த சக மாணவிக்கு இரவு நேரத்தில் உடல்நிலை மோசமானதால், மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டுமென விடுதி காப்பாளர் பிரேமாவிடம் கேட்டுள்ளார். மருத்துவமனை அழைத்து செல்ல ஆம்புலன்ஸ் கொடுக்க பிரேமா மறுத்ததாகவும், விடுதியை பூட்டியதாகவும் கூறப்படுகிறது. இதைதொடர்ந்து விடுதி தலைமை காப்பாளர் தர்மராஜ் மற்றும் உளவியல் துறை தலைவர் வேலாயுதம் ஆகியோர் ஹரிதாவை வகுப்பறையில் சக மாணவிகள் முன்னிலையில் அவமானப்படுத்தியதாகவும், வகுப்பறையில் மேஜை மீது நிற்க வைத்து தண்டித்ததாகவும் தெரிகிறது. அதுமட்டுமல்லாமல், துறை தலைவர் வேலாயுதம் தனது அறைக்கு அழைத்து அறையினை பூட்டி ஆபாசமாக தகாத வார்த்தைகளினால் பேசியதாகவும், வலுகட்டாயமாக மாற்று சான்றிதழ் அளித்து பல்கலைகழகத்தில் இருந்து வெளியேற்றியதாகவும் மாணவி ஹரிதா குற்றஞ்சாட்டியுள்ளார்.
துதொடர்பாக உளவியல் துறை தலைவர் வேலாயுதம், விடுதி காப்பாளர் பிரேமா மற்றும் தலைமை விடுதி காப்பாளர் தர்மராஜ் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, தமிழக ஆளுநர், காவல்துறை தலைவர், மனித உரிமை ஆணையம், கேரள முதலமைச்சர் உள்ளிட்டோரிடம் ஹரிதா புகார் கடிதம் அளித்துள்ளார். இந்த புகாரின் மீது வடவள்ளி காவல்நிலையத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் தொடர்பான முகாந்திரம் இருந்தால் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படுமென வடவள்ளி காவல் ஆய்வாளர் தெரிவித்துள்ளார்

Leave a Reply