குஜராத்தில் நான்கு நகரங்கள் முடக்கம்: கொரோனாவால் பரபரப்பு

குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத், ராஜ்கோட், வதேரா மற்றும் அகமதாபாத் ஆகிய 4 நகரங்களை அம்மாநில அரசு திடீரென முடக்கியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் ஒவ்வொரு மாநிலத்திலும் கொரோனா வைரஸ் கொஞ்சம் கொஞ்சமாக பரவி வருகிறது. அதில் குஜராத் மாநிலத்தில் ஒன்று.

குஜராத் மாநிலத்தில் தினந்தோறும் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே வரும் நிலையில் அதிரடியாக குஜராத் 4 நகரங்களை முடக்கியுள்ளது.

அகமதாபாத், ராஜ்கோட், சூரத், வதேரா ஆகிய முக்கிய வணிக நகரங்களான நான்கு நகரங்களையும் முடக்கியுள்ளதால் குஜராத் மாநிலமே ஸ்தம்பிக்கும் அளவுக்கு ஏற்ப ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply