shadow

puliஇளையதளபதி விஜய் தற்போது ‘புலி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது தலக்கோணம் பகுதியில் பிரமாண்டமான செட் போடப்பட்டு நடைபெற்று வருகிறது.

விஜய்,ஸ்ருதிஹாசன் சம்பந்தப்பட்ட காட்சிகள் மற்றும் கிளைமாக்ஸ் சண்டைக்காட்சிகள் இங்கு படமாக்கப்பட்டு வருவதாக படக்குழுவினர் தெரிவித்தனர். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு திருப்பதி வனப்பகுதியில் செம்மரக்கட்டைகள் கடத்தியதாக 20 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் தப்பிய ஒருசில தமிழர்கள் காட்டு வழியே வந்து விஜய்யின் ‘புலி’ படக்குழுவினர்களோடு மறைந்து இருப்பதாக ஆந்திர போலீஸாருக்கு வந்த ரகசிய தகவலை அடுத்து ஆந்திர மாநில போலீஸார் அதிரடியாக படப்பிடிப்பு நடைபெறும் பகுதிக்கு வந்து சோதனை செய்ததாகவும் இதனால் படப்பிடிப்பில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும் ‘புலி’ படக்குழுவினர் வரும் வாகனங்களும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது என்றும் கூறப்படுகிறது.  ஆந்திர போலீஸாரின் இந்த அதிரடி நடவடிக்கையால் ‘புலி’ படப்பிடிப்பு பாதிக்கப்படவில்லை என்று கூறப்பட்டாலும், படக்குழுவினர் ஒருவித டென்ஷனுடன் படப்பிடிப்பை நடத்துவதாக தெரிகிறது.

விஜய், ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, ஸ்ரீதேவி, சுதீப், பிரபு உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை சிம்புதேவன் இயக்கி வருகிறார். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இந்த படத்தை விஜய்யின் மேனேஜர் பி.டி.செல்வகுமார் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறார். இந்த திரைப்படம் விஜய்யின் பிறந்த நாளில் ரிலீஸாகும் என கூறப்படுகிறது.

Leave a Reply