shadow

தாய்லாந்தில் 30 நாட்களுக்கு விபச்சார விடுதி மூடல்

1தாய்லாந்து நாட்டின் மன்னர் பூமிபோல் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மரணம் அடைந்தார். 70 வருடங்கள் மன்னராக இருந்த பூமிபோல் மறைவால் அந்நாட்டு மக்கள் துயரத்தில் உள்ளனர். மேலும் இந்த துக்கத்தாஇ ஒருவருடம் அனுஷ்டிக்க தாய்லாந்து அரசு முடிவு செய்துள்ளது.

மேலும் மன்னர் இறந்த துக்கத்தின் காரணமாக தாய்லாந்து நாட்டில் அடுத்த 30 நாட்களுக்கு மதுக்கடை உள்பட கேளிக்கை நிகழ்ச்சி நடத்தும் அனைத்து நிலையங்களையும் மூட தாய்லாந்து அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் 30 நாட்களுக்கு விபச்சார விடுதியும் மூடப்படும். இதனால் தாய்லாந்துக்கு வரும் சுற்றுலா பயணிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

மேலும் பொதுமக்கள் அனைவரும் கருப்பு அல்லது அதன் நிறத்தை ஒத்த ஆடைகளை அணியவேண்டும் என்றும் பொது இடங்களில் ஒழுக்கத்துடன் நடந்துகொள்ளவேண்டும் என்றும் உள்நாட்டு ஊடகங்கள் பொதுமக்களுக்கு ஒழுங்கு நடவடிக்கை விதிகள் குறித்து அறிவிக்க வேண்டுமென்று அரசு அறிவுறுத்தியுள்ளது.

Leave a Reply