shadow

ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி சான்றிதழ் பெற்றவர்கள் ஏழு வருடங்களுக்கு மட்டுமே அந்த சான்றிதழை பயன்படுத்த முடியும் என்றிருந்த நிலையில் தற்போது ஆசிரியர் தகுதித் தேர்வு வெற்றி பெற்றவர்கள் வாழ்நாள் முழுவதும் செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

இதனை அடுத்து ஆசிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் இது குறித்து தமிழக அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

ஒருமுறை ஆசிரியர் தகுதி தேர்வு எழுதினால் அந்த தேர்வினால் கிடைக்கும் சான்றிதழ் வாழ்நாள் முழுவதற்கும் செல்லும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது அடுத்து ஆசிரியர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர் இதனையடுத்து அவர்கள் அரசுக்கு தங்களது நன்றியை தெரிவித்துள்ளனர்