shadow

டெட் தேர்வுக்கு விண்ணப்பம் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு!

ஆசிரியர் தகுதித் தேர்வான டெட் தேர்வுக்கு விண்ணப்பம் செய்ய ஏப்ரல் 13ம் தேதியுடன் கால அவகாசம் முடிவடைந்தது.

இந்த நிலையில் , டெட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை ஏப்ரல் 26 வரை நீட்டித்து ஆசிரியர் தேர்வு வாரியம் உத்தரவிட்டுள்ளது.

ஏப்ரல் 26ம் தேதிக்குள் இந்த தேர்வை எழுத விரும்புபவர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் அறிவித்துள்ளார்.