shadow

வகுப்பறையில் சியர்ஸ் கூறி மது அருந்திய மாணவிகள்!

வகுப்பறையில் கல்லூரி மாணவிகள் சியர்ஸ் கூறி மது அருந்திய வீடியோ இணையதளங்களில் வைரலாகிறது.

காஞ்சிபுரம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் 10க்கும் மேற்பட்ட மாணவிகள் குளிர்பானத்தில் மதுவை கலந்து சியர்ஸ் கூறி மது அருந்திய ஆட்டம் பாட்டம் போட்டுள்ளனர்.

இந்த வீடியோ இணையதளங்களில் வைரலானதை அடுத்து கல்லூரி நிர்வாகம் மது அருந்திய மாணவிகளை அழைத்து அறிவுரை கூறிவிட்டு அவர்களை சஸ்பெண்ட் செய்துள்ளது.