shadow

தெலங்கானாவில் வரும் 8ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளை மூட முதல்வர் சந்திரசேகர் ராவ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தெலங்கானாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் முதல்வர் சந்திரசேகர் ராவ் நடவடிக்கை எடுத்துள்ளார்.

ஜனவரி 8 முதல் ஜனவரி 16ஆம் தேதி வரை பள்ளி கல்லூரிகளை மூட வேண்டும் என்றும் மறு உத்தரவு வரும் வரை பள்ளிகள், கல்லூரிகளை திறக்க வேண்டாம் என்றும் தெலுங்கானா அரசு தெரிவித்துள்ளது