shadow

ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் அக்டோபர் 6ஆம் தேதி அக்டோபர் 9ஆம் தேதி மற்றும் அக்டோபர் 12ஆம் தேதி உள்பட மொத்தம் ஏழு நாட்கள் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது

இதுகுறித்து தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது

முதல் கட்ட தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் அக்டோபர் 4ஆம் தேதி முதல் அக்டோபர் 6 ஆம் தேதி டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும்

இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் அக்டோபர் 7 ஆம் தேதி முதல் அக்டோபர் 9ஆம் தேதி வரை டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும்

வாக்கு எண்ணிக்கை நாளான அக்டோபர் 12ஆம் தேதி 9 மாவட்டங்களிலும் முதல் கட்ட தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் அக்டோபர் 6 ஆம் தேதி டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும்.