shadow

தமிழகத்தில் கடந்த வருடங்களில் உச்சத்தில் இருந்த கொரோனா பாதிப்பு கடந்த சில மாதங்களாக குறைந்துகொண்டே வந்தது.

அதனால் தமிழகத்தில் விதிக்கப்பட்டிருந்த அனைத்து ஊரடங்கு கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டுள்ளன. அதன் காரணமாக மக்களும் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.

வழக்கம் போல பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு வகுப்புகளும் நடந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் விரைவில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது