தமிழிசை சவுந்தரராஜன் உறவினர் தற்கொலை: திடுக்கிடும் தகவல்

தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்களின் உறவினர் ஒருவர் கோவையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

தமிழிசை சௌந்தரராஜன் அவர்களின் மருமகளின் உடன் பிறந்த சகோதரர் 25 வயது சண்முகநாதன் என்பவர் கோவையில் தன்னுடைய வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்

சண்முகநாதன் அவருடைய பெற்றோரிடம் கார் வாங்கி கொடுக்கும்படி கேட்டதாகவும் ஆனால் பெற்றோர் வாங்கிக் கொடுக்க மறுத்து விட்டதாகவும் இதனை அடுத்து கோபத்தில் அவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாகவும் முதல்கட்ட விசாரணையில் தெரிய வருகிறது

தமிழிசை அவர்களின் மருமகளின் உடன்பிறந்த சகோதரர் சண்முகநாதன் தற்கொலை செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்துள்ள தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் உடனடியாக கோவை செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply