shadow

ரஜினிக்கு நன்றி தெரிவித்த தமிழிசை செளந்திரராஜன்

தமிழகத்தின் முன்னேற்றத்திற்கான திட்டங்களை ஆதரித்து வரும் ரஜினிகாந்த் அவர்களுக்கு தான் நன்றி கூறிக்கொள்வதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் இன்று சென்னை விமான நிலையத்தில் அளித்த பேட்டியின்போது தெரிவித்தார்.

மேலும் இன்று மக்களவையில் நடைபெறவுள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து கூறுகையில், ‘திமுக, காங்கிரஸ்தான் தமிழகத்தை எப்போதும் புறக்கணிக்கின்றன. முற்றிலும் ஒரு பொய் அறிக்கையை ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். லோக்சபாவில் ஒரு உறுப்பினர்கள் கூட இல்லாத திமுக எவ்வாறு நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவு தர முடியும்?

மேலும் இலங்கையில் தமிழகர்கள் கொல்லப்பட்ட போது திமுக எத்தனை நம்பிக்கையில்லா தீர்மானங்களை கொண்டு வந்தது? காங்.,ன் ஜீரோ செய்தி தொடர்பாளராக திமுக செயல்படுகிறது என்றும் தமிழிசை கூறினார்.

Leave a Reply