சசிகலா நிலைமை ரஜினிக்கு வந்துவிடக்கூடாது: தமிழருவி மணியன் எச்சரிக்கை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் விரைவில் அரசியல் கட்சியை தொடங்கி அரசியல் களத்தில் குதிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சமீபத்தில் மாவட்ட செயலாளர்களை சந்தித்த ரஜினிகாந்த் முதல்வர் பதவியை ஏற்கப் போவதில்லை என்று அறிவித்ததாக செய்திகள் வருகிறது.

இது பற்றி தமிழருவி மணியன் கூறுகையில் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக அறிவித்த சசிகலாவின் நிலைமை என்ன என்பது அனைவருக்கும் தெரியும். அப்படி ஒரு நிலைமை ரஜினிக்கு வந்துவிடக்கூடாது எனவே ரஜினிகாந்த் தான் முதல்வர் பதவியை ஏற்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார் தமிழருவி மணியனின் இந்த எச்சரிக்கையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Leave a Reply