’மாஸ்டர்’ ரிலீசுக்காகவே டி ராஜேந்தர் தடை போட்டாரா? பின்னணியில் யார்?

விஜய் நடித்து முடித்துள்ள ’மாஸ்டர்’ திரைப்படம் வரும் ஏப்ரல் 9ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வரும் மார்ச் 27ஆம் தேதி முதல் எந்த புதிய படத்தையும் ரிலீஸ் செய்ய மாட்டோம் என விநியோகிஸ்தர்கள் சங்க தலைவர் டி ராஜேந்தர் தெரிவித்துள்ளார்

விஜய் படமான ’மாஸ்டர்’ ரிலீசுக்கு 10 நாள்களுக்கு முன்னர் இந்த வேலைநிறுத்தம் தொடங்குவதால் விஜய் படத்திற்கு எதிராக வேண்டுமென்றே டி ராஜேந்தர் சதி செய்துள்ளதாக கூறப்படுகிறது

டி ராஜேந்தர் பின்னணியில் யாரோ இருக்கிறார்கள் என்றும் அவர்களின் தூண்டுதல் பேரில் தான் டி ராஜேந்தர் இந்த போராட்டத்தை தொடங்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது

இருப்பினும் மாஸ்டர் போன்ற பெரிய படத்தை ரிலீஸ் செய்யாமல் இருக்க எந்த விநியோகிஸ்தர்களும் விரும்ப மாட்டார்கள் என்றே கூறப்படுகிறது அப்படியே இருந்தாலும் விநியோகிஸ்தர்கள் இல்லாமல் நேரடியாக திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. விஜய் நடித்த புலி’ படத்தின் ஆடியோ விழாவின்போது விஜய்யை அடுக்குமொழிகளால் புகழ்ந்து பேசிய டி.ராஜேந்தர் தற்போது விஜய்க்கு எதிராக கிளம்பியிருக்கின்றாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

Leave a Reply