shadow

சுவாதி கொலையில் திடுக்கிடும் திருப்பம். கல்லூரி நண்பர் கொடுத்த முக்கிய தகவல்

swatiசென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இன்போசிஸ் ஊழியர் சுவாதி பட்டப்பகலில் மர்ம நபரால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் கொலையாளியை பிடிக்க தமிழக போலீஸார் தனிப்படை அமைத்து விசாரணை செய்து வருகின்றனர். இந்நிலையில் சுவாதியின் கல்லூரி நண்பர் கொடுத்த ஒரு தகவல் தற்போது வெளிவந்துள்ளது. அவர் போலீஸாரிடம் கூறியதாவது:-

நானும், சுவாதியும் ஒரே என்ஜினீயரிங் கல்லூரியில் படித்தோம். நல்ல நண்பர்களாக பழகிவந்தோம். திருவல்லிக்கேணியில் உள்ள எனது வீட்டிற்கு கூட சுவாதி வந்திருக்கிறாள். இரக்க சிந்தனையுள்ள சுவாதி நல்ல மனம் படைத்தவள். யாருக்கும் தீங்கு செய்ய நினைக்க மாட்டாள்.

கடந்த 18-ந் தேதியன்று சுவாதி, என்னிடம் செல்போனில் பேசினாள். அதுதான் அவள் கடைசியாக என்னிடம் பேசிய பேச்சு. மர்மநபர் ஒருவன் என்னை பின் தொடர்ந்து வருகிறான். கடந்த 10-ந் தேதியன்றும், 11-ந் தேதியன்றும் அவன் என்னை தொடர்ச்சியாக பின்தொடர்ந்து வந்தான் அவனை என்ன செய்வது என்று தெரியவில்லை என்று சுவாதி கூறினாள்.

அவனை யார் என்று அடையாளம் காட்டு நான் அவனை கண்டிக்கிறேன் என்று சுவாதியிடம் கூறினேன். அவன் அவ்வளவு பெரிய ஆளாக தெரியவில்லை. அவனை ஒன்றும் செய்யவேண்டாம். இந்த பிரச்சினையை விட்டுவிடு என்று சுவாதி அப்போது என்னிடம் கூறிவிட்டாள்.

நானும் அந்த பிரச்சினையை மறந்துவிட்டேன். சுவாதி கொலை செய்யப்படுவாள் என்று நான் கனவில் கூட நினைத்து பார்க்கவில்லை. சுவாதியை பின்தொடர்ந்த மர்மநபர் இந்த அளவுக்கு கொடூரமாக கொலை செய்வான் என்றும் நினைக்கவில்லை. அந்த படுபாவி கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்று சுவாதியின் நண்பர் போலீஸ் விசாரணையில் தெரிவித்துள்ளார்.

சுவாதி இந்த விஷயத்தில் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருந்து நண்பரிடம் சொன்னதற்கு பதிலாக காவல்துறையிடம் புகார் அளித்திருந்தால் இந்த கொலையை தவிர்த்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Leave a Reply