சுவாதியை கொலை செய்த மர்ம வெளிநாட்டிற்கு தப்பித்தாரா? பரபரப்பு தகவல்
பிரபல ஐ.டி. நிறுவனத்தின் பெண் ஊழியர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் மர்ம நபர் ஒருவரால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை செய்து வரும் போலீஸார் இதுவரை கொலை செய்த நபர் வெளிநாட்டிற்கோ, வெளி மாநிலத்திற்கோ தப்பி செல்லவில்லை என்றும் அவர் இன்னும் ஒரிரு நாட்களில் பிடிபடுவார் என்றும் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், கொலையாளி என சந்தேகிக்கப்படும் இளைஞர் தப்பிச்செல்லும் புதிய வீடியோ காட்சிகளை ரெயில்வே போலீசார் நேற்று வெளியிட்டனர். நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் அருகேயுள்ள பயிற்சி மையத்தில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமரா ஒன்றில் பதிவாகியுள்ள இந்த காட்சியில் உள்ள இளைஞரும் சந்தேகிக்கப்படும் இளைஞரின் அடையாளங்களோடு ஒத்துப்போவதாகவும், சந்தேகப்படும் நபர்தான் கொலையாளி என்பதை சம்பவத்தை நேரில் பார்த்தவர் உறுதிப்படுத்தி உள்ளதாகவும் ரயில்வே போலீசார் தெரிவித்தனர்.
பிளாட்பாரத்தில் வேகமாக ஓடி வரும் அந்த இளைஞர், பிளாட்பாரத்தை கடந்து பின்னர் சர்வ சாதாரணமாக நடந்து செல்லும் காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளது. மேலும் குற்றவாளியின் உருவத்தை பிறர் அடையாளம் காணும் அளவுக்கு பெரிதுபடுத்தியுள்ள போலீசார், இன்னும் ஓரிரு நாட்களுக்குள் அவனைப் பிடித்து விடுவோம் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் சுவாதி இறந்த இடத்தில் நேற்று அவருடைய பெற்றோர்கள் உடன் வேலை செய்யும் பணியாளர்கள் மெழுவர்த்தி ஏற்றி அஞ்சலி செய்தனர்.
Swathi murder does’nt escape other states
Leave a Reply
You must be logged in to post a comment.