எஸ் வி சேகர் கேள்வி
தமிழகத்தில் பாஜக நடத்தும் முக்கிய நிகழ்ச்சிகளுக்கு நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர் அழைக்கப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது
இந்த நிலையில் பெப்சி தொழிலாளர்கள் 25 ஆயிரம் பேர்களுக்கு பாஜக தரப்பில் இருந்து இலவசமாக மாஸ்குகள் வழங்கப்பட்டது
பெப்சி தலைவர் ஆர் கே செல்வமணி அவர்களிடம் ஒப்படைக்கப்பட்ட இது குறித்த ஒரு நிகழ்ச்சி சென்னையில் பாஜக தலைவர் எல்.முருகன் தலைமையில் நடந்தபோது இந்த நிகழ்ச்சியில் காயத்ரி ரகுராம், டி.ராகவன் உள்பட பாஜக பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்
ஆனால் இந்த நிகழ்ச்சியில் எஸ்.வி.சேகருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என தெரிய வந்தது. இந்த நிலையில் இதுகுறித்து தனது டுவிட்டரில் கூறியபோது இதுபோன்ற விழாக்களில் தன்னையும் அழைத்திருக்கலாம் என்று தெரிவித்திருந்தார். ஆனால் ஒருசில மணி நேரத்தில் இந்த டுவீட்டை அவர் டெலிட் செய்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.