நாளை விடுமுறையா? பாஜக பிரமுகரின் டுவிட்டால் பரபரப்பு!

தமிழக அரசு ஊழியர்களுக்கும் மற்றும் ஆசிரியர்களுக்கும் பொங்கல் பண்டிகை விடுமுறையாக ஜனவரி 15 முதல் 17 வரை விடப்பட்டுள்ளது. அதனை அடுத்து ஜனவரி 18, 19 ஆகிய தேதிகள் சனி, ஞாயிறு என்பதால் தொடர்ச்சியாக ஐந்து நாட்கள் பொங்கல் விடுமுறை கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இவ்வளவு விடுமுறை போதாதென்று ஜனவரி 13 மற்றும் 14 ஆம் தேதியும் விடுமுறை வேண்டும் என அரசு ஊழியர்கள் தரப்பில் இருந்து கோரிக்கை விடப்பட்டது. ஆனால் இந்த கோரிக்கை தமிழக அரசால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ஜனவரி 14ஆம் தேதி அதாவது நாளை போகிப் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு விடுமுறை அறிவிக்க வேண்டும் என மீண்டும் கோரிக்கை விடப்பட்டுள்ளது. இந்த கோரிக்கை ஏற்கப்படுமா என்று இதுவரை தெரியவில்லை

இந்த நிலையில் பாஜக பிரமுகரும், நடிகருமான எஸ்வி சேகர் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் ’ஏன் ஒவ்வொரு நாளாக விடுமுறை கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்? மொத்தமாக ஜனவரி 1 முதல் டிசம்பர் 31 வரை முறை கேளுங்கள். வீட்டில் உட்கார்ந்து சம்பளம் வாங்கிக் கொள்ளலாம். மாணவர்கள் படிப்பு உருப்பட்டுவிடும்’ என்று கொஞ்சம் காட்டமாகவே பதிவு செய்துள்ளார். இந்த பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply