ஷங்கர், அஜீத் ஆகியோர்களுக்கு அடுத்த இடத்தில் விஜய்சேதுபதி.
வளர்ந்து வரும் இளையதலைமுறை நடிகர்களில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை பெற்ற நடிகராக விளங்கி வருபவர் விஜய்சேதுபதி. இவர் நடித்த ‘நானும் ரெளடிதான்’ சூப்பர் ஹிட் ஆனதால் இவர் நடித்து வரும் படங்கள் அனைத்துமே விறுவிறுப்பாக முடிக்கப்பட்டு வருகிறது. வரும் பிப்ரவரியில் மட்டும் விஜய்சேதுபதியின் மூன்று திரைப்படங்கள் வெளிவர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் விஜய்சேதுபதி, மடோனா செபாஸ்டியன், சமுத்திரக்கனி உள்பட பலர் நடித்து முடித்துள்ள ‘காதலும் கடந்து போகும் என்ற படத்தை ‘சூதுகவ்வும்’ இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படத்தை சி.வி.குமார் அவர்களின் திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்தை லியோ ஜான் பால் படத்தொகுப்பு செய்துள்ளார். இந்த படத்தை பிரபல நிறுவனமான சுஷ்மா சினி ஆர்ட்ஸ் நிறுவனம் தமிழகம் முழுவதும் ரிலீஸ் செய்யும் உரிமையை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிறுவனம் ஏற்கனவே பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கிய ‘ஐ’ மற்றும் அஜித்தின் சூப்பர் ஹிட் படமான ‘வேதாளம்’ ஆகிய படங்களின் ரிலீஸ் உரிமையை பெற்று ரிலீஸ் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
You must be logged in to post a comment.