சூர்யா உள்ளே…கமல்ஹாசன் வெளியே
உலக நாயகன் கமல்ஹாசன் ‘சபாஷ் நாயுடு’ படத்தின் படப்பிடிப்பிற்காக தற்போது அமெரிக்காவுக்கு புறப்பட்டுள்ள நிலையில் கடந்த 20 நாட்களாக அமெரிக்காவில் ஓய்வு எடுத்து வந்த சூர்யா இன்று சென்னை திரும்பியுள்ளார்.
சூர்யாவின் சகோதரர் கார்த்தியின் பிறந்தநாள் இன்று என்பதால் நேரில் வாழ்த்து சொல்வதற்காக சூர்யா இன்று திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது. சென்னை திரும்பியவுடன் நேரடியாக கார்த்தியின் இல்லத்திற்கு சென்ற சூர்யா அமெரிக்காவில் இருந்து வாங்கி வந்த பிறந்தநாள் பரிசை கார்த்தியிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது.
மே மாதம் 6ஆம் தேதி ரிலீஸ் ஆன ’24’ படத்தின் பிரிமியர் காட்சியில் கலந்து கொள்ள மே 4ஆம் தேதி அமெரிக்கா சென்ற சூர்யா, தேர்தலுக்கு முன்பே சென்னை திரும்ப திட்டமிட்டிருந்ததாகவும் ஆனால் எதிர்பாராத சூழ்நிலை காரணமாக சூர்யா நாடு திரும்பவில்லை என்றும் அதனால் நடைபெற்று முடிந்த சட்டசபை தேர்தலில் அவர் ஓட்டு போடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
சூர்யா சென்னை திரும்பியதை அடுத்து விரைவில் ‘எஸ் 3’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.