shadow

சூர்யா நடித்த ‘ஜெய்பீம்’ திரைப்படம் நாளை அமேசான் ஓடிடியில் ரிலீசாக இருக்கும் நிலையில் இன்று தமிழக முதல்வரிடம் சூர்யா ரூபாய் ஒரு கோடி நிதி உதவி செய்துள்ளார்.

சூர்யா நடித்த ‘ஜெய்பீம்’ திரைப்படம் பழங்குடியின மக்களின் வாழ்வியல் நெருக்கடிகள் குறித்து பேசப்படும் படம் என்பதால், பழங்குடி இருளர் மாணவர்களின் கல்வி நலனுக்காக முதலமைச்சர் முக ஸ்டாலின் இடம் ரூபாய் ஒரு கோடி நடிகர் சூர்யா தனது 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் மூலம் அளித்துள்ளார்

நாளை வெளியாக இருக்கும் ‘ஜெய்பீம்’ திரைப்படத்தில் பழங்குடி இருளர் இன மக்களின் வாழ்வியல் நெருக்கடிகள் பேசப்பட்ட நிலையில் அந்த இன மக்களுக்காக ரூபாய் ஒரு கோடி நிதி அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.