நடிகர் சூர்யா மேடையிலேயே கதறி அழுததால் பரபரப்பு

நடிகர் சூர்யா நேற்று சென்னையில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்து கொண்டு பொது மேடையிலேயே அழுத காட்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

நடிகர் சூர்யாவின் அகரம் அறக்கட்டளை சார்பில் புத்தக வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கலந்து கொண்டார்

இந்த விழாவில் பேசிய அகரம் அறக்கட்டளை மூலம் படித்து தற்போது உயர்ந்த நிலையில் உள்ள ஒரு மாணவி தன்னுடைய சிறுவயதில் கஷ்டங்கள், குடும்ப சூழ்நிலை, வறுமையால் தானும் தனது குடும்பத்தினரும் பட்ட கஷ்டங்கள் குறித்து மிகவும் நெகிழ்ச்சியுடன் பேசினார்

அவர் பேசப்பேச சூர்யாவின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. ஒரு கட்டத்தில் அவர் அழுது செய்துவிட்டார். இதன் பின்னர் அந்த மாணவி தனது பேச்சை முடித்ததும் எழுந்து சென்று அவரை தட்டிக் கொடுத்து பாராட்டியதோடு, வருங்காலத்தில் நீ பெரிய ஆளாக வர வேண்டும் என்றும் அதன் பின்னர் உன்னைப்போல் கஷ்டப்படும் மாணவ-மாணவிகளுக்கு உதவி செய்ய வேண்டும் என்றும் அறிவுரை கூறினார்

புத்தக வெளியீட்டு விழாவாக தொடங்கிய இந்த நிகழ்ச்சி சூர்யாவின் அழுகையினால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply