shadow

இயக்குனர் பாலா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகும் ’சூர்யா 41’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது

18 ஆண்டுகளுக்கு பின்னர் பாலா ‘ஆக்சன்’ என்று கூறுவதை அருகில் இருந்து கேட்கும் வாய்ப்பைப் பெற்றேன் என்று சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் .

இன்று முதல் பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு அதிகாரபூர்வமாக தொடங்கிவிட்டதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

இந்த படத்தை அடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் வாடிவாசல் என்ற திரைப்படத்தில் சூர்யா நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.